பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


203. செயலே பெரிது!

உபதேசமும் வாழ்வியலும் ஈருருளைகள்!
சொல்வதைப் போலச் செய்தல் விழுப்பம்!
நீ, எதை நம்புகிறாய்! அதையே செய்து பழகு!
நீ, ஒரு மதபோதகரா?
மருத்துவம் செய்பவரா?
எத்தொழிலாகவேனும் இருக்கட்டும்!
நீ, எதைப் போதிக்கிறாயோ
அதற்காக நீ வாழ்ந்தால்
அதுவே உயர் போதனையாக அமையும்!
இதுவே சரியான நியதி!
உபதேசியா? உபதேசித்தலிலேயே வாழ்கின்றான்
மருத்துவன், மருத்துவம் செய்தலிலேயே வாழ்கின்றான்!
நாம் கவனிப்போம்!
போதனைகளில் சிறந்தது செயல்களே!
செயல்களிலேயே மானுடம் வெற்றி காண்பது!