பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

389


தீமைக்கு ஈடாக நன்மையைச் செய்க!
நம்பிக்கையோடு நோக்குக!
நம்பிக்கையைப் பெறுக!
தீமை தொடராது, நாம் நினைக்காவிடில்!
மற்றவர்களின் பாபச் சுமைகளைச் சுமந்து நட!
கேடொன்று மில்லை!
குப்பை மேட்டில் தீ பற்றும் எரியும்!
வெறுந்தரையில் அணைந்து போகும்!
உன் மனத்துரய்மையில் மற்றவர் தீமை தாக்காது;
கவலற்க!
அமைதியின்வழி அனைத்தையும் ஏற்றிடுக!