இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
394
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
காலம் கறங்கெனச் சுற்றி வருகிறது.
கால தேவதையின் பயணத்தில்
இந்தப் புவிக்கோளம் அடைந்து வந்துள்ள
மாற்றங்கள் பலப்பல!
இன்று அடைந்து வரும் மாற்றங்கள் பலப்பல!
ஆயினும், மாற்றங்கள் செய்த
புதுமைக் கோலங்கள் புறத்தேயே நிகழ்ந்துள்ளன.
அகத்தே, மனிதன் பின்னோக்கிச் சென்றுள்ளான்!
அவன் வளராமல்
வையகத்துக்கு வாழ்வேது? வரலாறு ஏது?
சாவாப் பிணங்கள் புவியை நடத்துமோ?
பொதுமையில் நடத்துமோ?
உண்டுடுத்தி வாழும் மாந்தர்கள்
எரி கொட்டகை சாம்பலாய்ப் போயினர்!
சாகாதீர்கள்! வாழுங்கள்!