பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



221. திருவுள்ளச் சம்மதமா?


சக்தியே!
தீமையைத் எதிர்த்துப் போராடி -
வீரமாகாளியெனப் பேர் கொண்டெழுந்தருளிய தாயே! இன்று நின் பெயரால் தீமையே வளர்கிறது!
இதுவும் நினக்குத் திருவுள்ளச் சம்மதமா?
நின் வழிபாட்டு நிகழ்ச்சியில்
திரைப்படங்களின் ஆதிக்கம் ஏன்?
கற்க, கேட்க வாய்ப்பின்றி
ஒலி பெருக்கியின் இரைச்சல்!
சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதிக்கிறது!
தாயே! தெருவுதோறும்
நீ எழுந்தருளி வாழ்விக்க வா!
வாழ்விழக்கச் செய்யாதே!
நிழலுக்கு ஒதுங்க ஒருமரம் கூட நடாதார்
வேப்பமரமே நீயென விளங்குவது அறியாமல்
ஆரவார வழிபாடு செய்கின்றனர்!
இதில் போட்டிகள் வேறு!
தாயே! காளியம்மா! காப்பாற்று!