பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




227. ஒசோன் மருந்து


பாரினைத் தழுவிப் பாதுகாக்கும் சோலைகளே!
வாழிய, வாழிய சோலைகளே!
மண்ணும் மண்ணில் வாழும் மானுடமும்
வாழவகை செய்யும் சோலைகளே வாழ்க!
எங்கும் பசுமையைக் காட்டி வாழ்க!
கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்து
மகிழ்விக்கிறாய் சிந்தைக்கினிய செவிக்கினிய குயிலிசை
கேட்க வைத்து மகிழ்வூட்டும் சோலையே வாழ்க!
உடலில் உயிர்தங்கும் உயிர்ப்புக்குரிய
உயரிய ஆக்சிஜனை அள்ளித்தரும் சோலையே வாழ்க!
தின்னக் காய்களும் கனிகளும் தரும்
பழமரச் சோலைகளே வாழ்க வாழ்க!
அசுத்தக் காற்றினைக் குடித்துப்
பூ மண்டலத்தைத் தூய்மையாக்கிக் காக்கும் சோலைகளே
                                                         வாழ்க!
ஒ, ஓ! பசிய சோலைகளே!
உனக்கொரு வேண்டுகோள்!
இப்புவியினைக் காக்கும் ஒசோனில் ஒட்டை
                                                   விழுந்துள்ளது.
அந்த ஒட்டையைக் காக்கும் ஆற்றல்
நீ, நிகழ்த்தும் விந்தைமிகு ஒளிச் சேர்க்கைக்கு உண்டு
ஒ, ஓ, சோலைகளே!
ஒளிச்சேர்க்கையை விரைந்து செய்!
பன்முறை செய்க்! பாரினைக் காத்திடு!