பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


229. நன் நெஞ்சே நயந்தருள் செய்!

நெஞ்சே! நின்னை இரந்து வேண்டுவன்
மண்அரிப் பிற்கொடும் மனஅரிப் பாகிய
கவலையைத் துரத்துக! அவலச் சோர்வினை
நீக்குக! ஊற்று நீரெனப் பொங்கும்
உள்ளக் கிளர்ச்சியை வழங்கி உயர்ந்த
தொழில்திற முடனே அசைவிலா முயற்சியைக்
கைக்கொண் டுலகம் உவப்ப உதவிடும்
உழைப்பினைத் தந்து, இவ் வுலகில் தகவுடன்
வாழ்ந்திடச் செய்க! மழைநீர்த் திவலை
சிப்பியில் சேர்ந்து முத்தென முகிழ்ப்பது
போல, என் வாழ்வில்நின் மேலாம் உதவி
முத்தினும் உயர்ந்த முழுப்பயன் தந்திடும்!
நன்னெஞ் சே, நீ நயந்தருள் செய்கவே!