பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

448

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கணவன் சிங்காரவேலன் பற்றிப் பெருமையாகவே, சொல்வாள். குறையே சொல்லமாட்டாள் ஏன்? இல்வாழ்க்கை பிறர் பழிப்பதாகிவிடக்கூடாதே என்ற அச்சம்.

ஒரு நாள் இறைவனே கேட்டருளினான் ! கடவுளிடத்தும் கணவன் சிங்காரவேலனைப் பற்றி நன்றாகவே சொன்னாள். ஏன்? இல்லறம் பிறர் பழிப்பதாகப் போய் விடக்கூடாதே என்ற கவலை. மனைவியின் கடமை சொல்லில் சோர்வடையக்கூடாது. ஆனால் சிங்காரவேலன் திருந்திய பாடில்லை. சுந்தரியே குடும்பத்தை நடத்தினாள். திருக்குறள் மரபுப்படி நடத்தினாள்.