கவியரங்கக் கவிதைகள்
35
கோட்டை பலநாம் கொண்டிலோம் எனினும்
தெளிவுறத் தமிழைத் தெரிந்திட தேவ
கோட்டையை நமது கோட்டையாய்க் கொண்டோம்
இந்தக் கோட்டையில் எந்த மேடை
ஆயினும் அந்த மேடையில்ந மக்கும்
ஓரிட முண்டு! இவ்வா றுறவினைப்
பெருக்கி எம்மை வளர்த்திடும் பெருமையோர்,
குறட்கழ கத்தினர்! கொள்களம் நன்றி!.
பட்டி மன்றமே கேட்டுச் சளைத்துப்
புளித்துப் போன துன்பம் ஒர்புறம்
தொடர்ந்து பிடிக்கும் வேட்கை ஒர்புறம்
இவற்றிடை எண்ணி எண்ணிப் போராடி
தேர்ந்தொரு வழியைத் தெரிந்தனர்! இவரைக்
கவிஞ ராக்கிக் காணுவோம் என்றே
கவியரங் கேற்றக் கருதினர் போலும்!
கவிதை உலகம் நமக்குப் புதியது
தேர்ந்து கவிசொலும் தேசிக னல்லன்
ஆனந் தத்தமிழ் அழகுறப் பாடும்
அமிர்த விங்கனும் அல்லன்; இன்பக்
கவிபொழி கண்ண தாசனு மல்லன்
லடிதமிழ்க் கவிமுடி யரசனு மல்லன்
பழகு தமிழ்க்கவி நாமே! யாரும்
எமைநோ காதீர், ஏற்றிவைத் தவரை