பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றே நுந்தம் இதயம் தேறி
மகிழுமின், மகிழுமின்! செய்வதென் பிறிதே?


4. கவிஞர் சக்தி சரணன்

அறிமுகம்:

கூடும் குடும்பத் தொழிற்சாலைதனில்
ஒய்வொழி வில்லா உற்பத் தியினால்
இருபத் தாண்டில் இரண்டு நூறு
கோடிக் கணக்கில் குழந்தைகள் பெருக்கம்!
நிக்சன் அனுப்பிய வலிமைத் தோளான் (Armstrong)
நிலவின் மீது நிமிர்ந்து நடந்தது
பெரிய சாதனை! எனினும் அருமை
நந்தம் நாட்டின் மக்கட் பெருக்கச்
சாதனைக் கீடாய்ச் சாற்றுதல் கூடுமோ?
பாரத பூமியில் பல்கிடும் மக்கட்
பெருக்கினை யன்றிப் பிறிதென்ன கண்டோம்?
பிறந்ததாய் நாடு பெரும்பய னுறவே
வாழ்ந்து வளத்தொடு புகழினைச் சேர்ப்பவர்
மிகமிகச் சிலரே! மீந்தவர் பலரே!
இருதிறப் பாலோர் இணைந்து கூடிடின்
மக்கள் தோன்றுதல் மாநிலத் தியற்கை
எனினும் நன்மக்கட் பேற்றினை எய்திடல்
மேவிய இயற்கை விளைவினால் அன்றே!
உடலுறு காமக் கலவியால், உலகச்
சுமையெனும் மாக்களே தோன்றுவர், உளமார்
இன்பக் காதலின் இயைந்த கலவியே
நன்மகப் பேற்றினை நல்குவ தாகும்.
உடற்பசி தணிந்து உளப்பசி மிகுந்து
சுடுநெருப் பாகத் தோய்நிலை மாறிக்