பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

113



மூட நம்பிக்கை

அறிவியல் வளர்ந்து வருகிறது; நாளும் வளர்ந்து வருகிறது. அதேபோழ்து மனிதர்களிடம் உள்ள மூட நம்பிக்கைகள் அகன்றனவா? இல்லை? மூட நம்பிக்கைகள் அகலாத நிலையில் அறிவியல் வளர்ச்சி போதிய பயனைத் தராது. விமானத்தில் பறக்கும் நிலைக்கு வளர்ந்த மனிதன் கருப்பர் வாழும் பகுதியெனப் பிரித்தல் முறைதானா? ஆதி திராவிடர் வாழும் காலனி என்று ஒதுக்குதல் அறிவுடைமையா? இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இனம், சாதி வேறுபாடற்ற மனித குலத்தை உருவாக்காத நிலையில் விமானத்தால் என்ன பயன்? “யாதும் ஊரே ! யாவரும் கேளிர்!” என்ற இலக்கியம் வாழ்வாகாமல் உலகஞ் சுற்றி வருவதில் என்ன பயன்? மனிதன் என்ன பருந்தா? கழுகா? சமூகச் சிந்தனையும் மனித நேயமும் இல்லாதவர்கள் - இன்று ஏற்றுக்கொள்ளும் மத யாத்திரரை பலப்பல.

உலகம், கோள்களால் இயங்குகிறது. கோள்கள், மனிதனின் கைக்கு எட்டிய அனுபவத்திற்கு வரும் நாள் தூரத்தில் இல்லை என்பதைச் சந்திரனுக்கு மனிதன் சென்றதன் மூலம் அறிவியல் நிரூபணம் செய்திருக்கிறது. ஆக, உலக இயக்கத்திற்குச் சாதனமாக உள்ள கோள்கள் - கிரகங்கள் தெய்வங்கள் அல்ல; அவை வணங்கத் தக்கவையல்ல. பயன்படுத்திக் கொள்ளத்தக்கன என்ற உண்மையை உணர வேண்டாமா? கிரகங்களைப் பற்றிய அறிவு இன்று வளர்ந்துள்ளது. சந்திரனைக் கண்டு எட்டிப் பிடித்த பின்னும் மற்ற கிரகங்களைக் காணும் முயற்சி நடப்பதறிந்தும் நவக்கிரக வழிபாடு செய்யலாமா? இது பக்தித் துறையிலுள்ள மூடநம்பிக்கை. பகுத்தறிவுத் துறையிலும் மூடநம்பிக்கைகள் இல்லாமல் இல்லை.

கிரகங்களின் சஞ்சாரத்திற்கும் நமது நரம்பு மண்டலத்திற்கும் உறவு இருக்கிறது. அதனால் கிரகங்களின் நகர்வு