சமயவியல் கட்டுரைகள்
153
"காலமொடு தேச வர்த்தமான மாதிக்
கலந்துநின்ற கருணைமொழி"
என்றார் தாயுமானார். "கணக்கு, வழக்குகளைக் கடந்த திருவடி” என்றும், "விரதங்கள் மாண்ட மனத்தினன் கண்டாய்" என்றும் அப்பரடிகள் பேசுகின்றார். மாணிக்க வாசகரோ,
முன்னைப் பழம்பொருளே
முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் -
பெயர்த்தும் அப்பெற்றியனே!”
என்று பாடிப்பரவுகிறார்.
இல்லங்கள் தோறும் இறைவன் எழுந்தருளுகின்றான். ஆன்மாக்களை உய்விக்க வான்பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொள்ளுகிறான். ஆன்மாக்கள் குடியிருக்கும் இல்லங்களின் பட்டியல் இங்கு அற நிலையங்களுக்கு வேண்டும். மதரீதியில் வீடுகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட வேண்டும்.
மாணிக்கவாசகர் தான் பெற்ற இன்ப அனுபவத்தைப் பேசுகின்றபோது,
"செங்கணவன்பால் திசைமுகன்பால்
தேவர்கள்பால் எங்கும் இல்லாதோர் இன்பம்"
என்று குறிப்பிடுகின்றார்.
"நான் ஈடிணையற்ற உனது திருவடிகளைப் பெற்றேன்” என்கிறார். இத்தனையே,
- கொண்டது என் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்!"
வணிகக் கண்ணோட்டத்தோடு முடிக்கிறார்.
கு.XV.11