சமயவியல் கட்டுரைகள்
181
என்று அருளுகின்றார். பேச்சில் மட்டும்தானா? இல்லை. தம் பத்தியின் மேம்பாட்டால், தாம் வினையிலியாக ஆனதைத் தானே கூறியுள்ளார்.
- "சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்.தன்
- கண்ணினைநின் திருப்பாதப் போதுக் காக்கி
- வந்தனையுமம் மலர்க்கே ஆக்கி வாக்குன்
- மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்க ளார
- வந்தனை.ஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
- மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
- தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித்
- தனிச்சுடரே இரண்டுமிலித் தமிய னேற்கே"
- "சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்.தன்
என்று அருளுகிறார் தாம் வல்வினையினின்றும் விடுபட்டதை.
வள்ளுவர் முதற்கடவுளைத் "தனக்குவமை இல்லாதான்" என்று கூறுகின்றார். இக்கருத்தை அடிகள்,
"முன்னோன் காண்க முழுதோன் காண்க
தன்நேர் இல்லோன் தானே காண்க”
என்று அழகாகக் கூறி விளக்குகின்றார்கள். சிவபெருமான்து தனக்கு உவமை இல்லாத திறனை இளங்கோவடிகள், "விண்ணோர் அமுது உண்டுஞ் சாவ, ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டு இருந்தருள் செய்குவாய்," என்றும், "பிறவா யாக்கைப் பெரியோன்" என்றும் கூறி விளக்குகின்றார்.
பிறவிப்பிணிக்கு மருந்து இறைவனடி சேர்தலே என்று வள்ளுவர் கூறுகின்றார்.
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்."
என்பது திருக்குறள். இக்கருத்தை அடிகள்,