பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க"

என்றும்,

"மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி"

என்றும்,

"பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்”

என்றும் அருளியுள்ளார்கள்.

வள்ளுவர் அந்தணர் என்ற சொல்லை அருளாளார். என்ற பொருள்பற்றித் துறவிகளுக்கு ஏற்றிச்சொல்லுகின்றார். இப்பொருளிலேயே அடிகளும் அந்தணர் என்ற சொல்லைக் கையாண்டுள்ளார்.

"அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.”

என்பது குறள்.

"தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூறி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்கா ணம்மானாய்”

என்கிறார் வாதவூரர். எல்லா உயிர்களையும் கருணையின் மேலீட்டால் வலிய அழைத்து வீட்டினை நல்கும் பேரருளாளன் ஆண்டவன் என்பது அடிகளின் கருத்து.

அன்பில்லாத வாழ்க்கை பாலைநிலத்தின்கண் வற்றல் மரம் தளிர்த்தை ஒக்கும் என்றும் கூறுகின்றார் வள்ளுவர். வற்றல் மரமே தளிர்க்காது.அதுவும் பாலை நிலைத்தின்கண் ‘எங்கனம் தளிர்க்க முடியும்? எனவே, வற்றல் மரம் பயனற்றது என்று கூறுகின்றார்.

"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று."

என்பது திருக்குறள், இந்த வற்றல் மரத்தையே அடிகளும்,