பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட் டாது.அடி யேஇறைஞ்சி
இரந்தஎல் லாம்எழக்கேபெற லாம்என்னும் அன்பர் உள்ளம்
கரந்துநில் லாக்கள்வ னேநின்தன் வார்கழற்கு அன்பு
..............................எனக்கு
நிரந்தர மாய்அரு ளாய்நின்னை ஏத்த முழுவதுமே”

என்று மிக அழகாக அருளியுள்ளார்கள்.

- 'தவ்த்தின் பய்னால் 'நான்' என்னும் ஆணவமலத்தின் காரியமாகிய அகங்காரம் ஒழிய வேண்டும் என்பதும், அங்ஙனம் ஒழியப் பெற்றால், மன்னுயிர்கள் எல்லாம் தொழும் என்பதும் வள்ளுவர் கருத்து.

"தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்"

என்பது திருக்குறள். அடிகள் இக்கருத்தை,

"நாம் ஒழிந்து சிவமானவா பாடித்
தெள்ளேணங் கொட்டாமோ?”

என்றும் அருளியுள்ளார்கள். அதாவது சீவபோதம் (தற்போதம்) நீங்கித் திருவருளில் தோய்ந்து எல்லாவற்றையும் திருவருளாகவே பாவித்தல். இதனைக் குமரகுருபர அடிகளார், இலக்கண வாய்பாட்டில் வைத்து மிக அழகாக, "பின்னம் ஓர் மாத்திரை குறுகினேன் பின்" என்று கூறினார்கள்.

உண்மையான தவமும் பக்தியும் இல்லாமல் வேடத்தாலும் செயலாலும் பக்தியுடையார் போலப் பிறருக்குக் காட்டித் திரிபவர் பலர் உளர் என்பது வள்ளுவர்

"மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்."