பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

185


என்பது திருக்குறள். இக்கருத்தை அடிகள் மிகஅழகாகக் கூறி நம்மை மகிழ்விக்கின்றார். வள்ளுவர் நடிக்கின்றனர் என்று கூறி நிறுத்தினார். அடிகள் நடிப்பதோடன்றி, உண்மைத் தவத்தினுடைய பயனைப்பெற விரும்பி வினாவுகின்றார்கள் என்று கூறுகின்றார்.

"நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே
விடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்

என்பது அடிகளின் அருண்மொழி.

உலகப் பற்றும், வாதனைகளும் நீங்கப் பற்றற்ற பரம் பொருளைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பது வள்ளுவர் கருத்து.

"பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றை
பற்றுக பற்று விடற்கு"

என்பது வள்ளுவர் வாக்கு அடிகள் இக்கருத்தை,

"கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல்புகழே
பற்றிஇப் பாசத்தைப் பற்றற்றநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்."

என்றும்,

"பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவர்க்கே சென்றுர்தாய் கோத்தும்பி"

என்றும் அருளியிருப்பன அறிந்து இன்புறுத்தக்கன.

அல்லற்பிறவிக்குக் காரணம் ஆசை என்பதே பெருமக்களது கருத்து. "ஆசையறுமின்கள் ஆசையறுமின்கள்" என்று அறிவுரை கூறுகின்றார் திருமூலர், அவாவே பிறப்புக்கு விதை என்பதை வள்ளுவர்,