பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேலை வாய்ப்பு இல்லாதோர் 50 கோடி

எழுத்தறிவு இல்லாதோர் 81.4 கோடி

இத்தகு அவல நிலையில் - இந்த அவலச் சூழ்நிலையில் சமநிலை, சமவாய்ப்புச் சமுதாய அமைப்பு பற்றிப் பேசினால் ஆத்திரத்துடன் பழமைவாதச் சமூக அமைப்பு போராட முன்வருகின்றது. "தலைவிதி"த் தத்துவம், "கடவுளின் சித்தம்” பற்றிப் பேசித் திசை திருப்புகின்றனர். சமதர்ம சமுதாய அமைப்புக்குப் போராடுபவர்களை நாத்திகர் என்று வசைபாடுகின்றனர்.

கடவுள் ஒருவரே! மதங்கள் பலப்பல! இன்று மதங்கள் மானுடத்திற்கு நன்மை செய்யும் ஆற்றலை இழந்து விட்டன! 'சொர்க்கம்' என்ற நினைப்பில் நரகத்தையே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்! இன்றைய மதம் "கடவுள் மத" மாக இல்லை. நம்முடைய மதங்கள் கடவுளை விழுங்கிச் செரிமானம் செய்து கொண்டு பல நூற்றாண்டுகள் உருண்டோடி விட்டன! இன்றைய மதங்களில் சடங்குகள், ஆசாரங்கள், முடை நாற்றம் வீசும் மூடத்தனமான பழக்கவழக்கங்கள் நிறைந்து விட்டன! மதமெனும் பேயே நடமாடுகிறது! அதனாலன்றோ, "வேதம் புதுமை செய்” என்றான் பாரதி. விவேகானந்தர். ஒரு புது மதமே தேவையென்றார்! இந்த உலகில் புதியமதம் காணப் பலர் முயன்றனர். கொழுத்த முதலாளித்துவம், கெட்டித்தன்மை வாய்ந்த மதபீடங்கள் - இவற்றுக்கு பிழைப்புக் காரணமாக துணை போகிய அராஜகத் தன்மை ஆகியவற்றால் இந்த உலகம் அல்லற்படுகிறது; அழிவை நோக்கிச் செல்கிறது! அழிவை நோக்கிச் செல்லும் இந்த உலகத்தைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

ஆம்! இது உடனடியாகச் செய்ய வேண்டிய பணி! கல்லறைக்குப் போகவேண்டிய பழமை, மூர்க்கத்தனமாக