பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

443


மின்னணுவியல் துறையில் வளர்ந்து உலகத்தில் வலிவும் வளமும் பெற்றுள்ள நாடுகளின் வரிசையில் முன்னிலையில் இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? உலகின் எல்லா நாடுகளிலும் பயிற்றுமொழி தாய்மொழியாகவே இருக்கிறது. தாய்மொழிவழிக்கல்வி சிந்தனையை வளர்ப்பது. அயல்மொழிவழிக் கல்வி மனப்பாடம் மட்டுமே. அறிவை விரிவு செய்யவும் அகண்டமாக்கவும் தாய்மொழிவழிக்கல்வியே துணைசெய்யும். நமது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பயிற்று மொழியையும் இந்திய அரசின் ஆட்சி மொழியையும் ஒன்றாக எண்ணிக் குழப்புகின்றனர். ஆட்சி மொழியில் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். இதற்கு ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்றால் போதும். அறிஞர்கள், விஞ்ஞானிகள், தொழில் மேதைகள் உருவாகத் தாய்மொழி தமிழே பயிற்சி மொழியாக இருத்தல் வேண்டும். தமிழ்மொழி காலந்தொறும் அவ்வக்காலத்திற்கேற்ப வளர்ந்து வந்தமொழி. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு இன்றுவரை இந்த நூற்றாண்டின் செல்வமாகிய அறிவியல் செல்வத்தைத் தமிழ் பெறவில்லை; நூல்கள் இல்லை என்கின்றனர். தேவை தோன்றினால் தானே படைப்புகள் தொடரும். ஆதலால், தமிழ்நாடு அறக்கட்டளை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு அப்பல்கலைக்கழகத்தின் அறிவியற்புலத்தினை முழுமையாக இயக்கவேண்டும். தமிழில் அறிவியல் ஆய்வுகள் நிகழவும் நூல்கள் எழுதவும் வெளியிடவும் தமிழ்நாடு வளர்ச்சி அறக்கட்டளை உதவி செய்யவேண்டும். இது காலத்தால் செய்யவேண்டிய கட்டாயக் கடமை. இன்று இத்துறையை நாம் கவனிக்கத் தவறினால் தமிழர்கள் உலக இனமக்களுடன் நிற்க முடியாமல் பின்தங்கி விடுவர். அதுமட்டுமல்ல. தமிழ்நாட்டிலும் இருண்ட நிலை உருவாகிவிடும். ஏன்? ஒளிவு மறைவு இல்லாமல் இந்தி மொழியைவிடத் தமிழ்மொழியில் பின் தங்கி விடும். அவ்வழி தமிழ்மக்களும் தாழ்வர். தமிழ்நாட்டில்