பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

461

உம்மால்தான் பல மனிதப் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டன! கபால ஒடுகளையும் மனிதக் குருதியையும் அடையாளச் சின்னமாய் அணிந்த ஆயுதம் ஏந்திய வன்முறையாளர்களை அமைதி வழிக்குத் திருப்பிய புதிய அகிம்சாமூர்த்தி நீர்தான்! அனல் பறக்கும் கந்தகக்காட்டின்
வெப்பத்தைத் தணிக்க
கற்பக விருட்சமே
மனிதப் புனிதரே!
மனித நேய மிகுதியால்
நீர்விட்ட கண்ணிர்த்துளிகளே
மதவெறித் தீயை அணைத்த
‘புனித நீர்’!
இரும்புப் பெட்டிகளில் சிறையிருந்த
இலக்கியத்தை எடுத்து
ஏழைகளுக்குப் பரிமாறியவரே!
பாமரனையும்
பைந்தமிழ் இலக்கியத்தேன் பருகச்
செய்த பாரிவள்ளலே!
வெறும்கையில் விபூதிகுங்குமம்
வரவழைக்கும்
மாயத்துறவியல்ல நீர்!
ஆனாலும்
ஏமாற்றங்களிலே வாழ்கின்ற
மக்களின் வாழ்க்கையில்
மாற்றங்களை நிகழ்த்துகின்ற
மந்திரவாதி நீரே!
உம்பார்வை பட்ட பின்தான்
பாலைகள் எல்லாம் பசுஞ்சோலைகளாயின!