இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
86
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தமிழ் பயிற்று மொழியாதல் மூலம் அடியிற்கண்டுள்ள நன்மைகள் உண்டு என்று நமது பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் ச. முத்துக் குமரன் அவர்கள் பட்டியலிடுகிறார்கள்:
- இயற்கையாக அறிவு பெறலாம்
- விரைவாகக் கற்கலாம்
- முழுமையாக அறிவு பெறலாம்
- சுயமரியாதையை வளர்க்கலாம்
- கற்றது நன்கு மனதில் பதியும்
- எளிதாகக் கற்கலாம்
- சரியாகப் புரிந்து கொள்ளலாம்
- கற்கும் நேரம் முழுதும் பயன்படும்
- பள்ளிக்கும் வீட்டிற்கும் தொடர்பு வாய்க்கும்
- எல்லாரும் உயர்கல்வி கற்கலாம்
இவற்றுடன்
- சிந்தனை வளரும்!
- அறிவு விரிவாகும்!
- புதியன காண வாயில்கள் தென்படும்
- மூலைக்குச் சோர்வு வராது
என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.
முயன்று வெற்றிபெறுவோம்!
1937-ம் ஆண்டில் கூடிய தேசியக் கல்வி மாநாடு தாய்மொழி மூலமே கற்கவேண்டும் என்று தீர்மானம் இயற்றி வலியுறுத்தியது.
கோத்தாரி கமிஷன் அறிக்கை “இந்திய மொழிகளை அறிவியல், தொழில் நுட்பஞ் சார்ந்த மொழியாக் வளர்த்து நவீன்ப்படுத்த வேண்டும்” என்று கூறியது. இந்தப் பணி