பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

143



தம்பிரான் மறுக்கிறார். ஆயினும் தருமபுரம் மகாசந்நிதானம் மனம் நெகிழ்ந்துவிட்டது. அதுவும் ஒரு ஆதீனம், வயதான ஒரு தம்பிரான் அழுகிறார்! குன்றக்குடி ஆதீனத்துக்கு உதவி செய்யத் திருவுள்ளம்! அதேபோழ்து கந்தசாமித் தம்பிரானை இழக்க முடியாத திருவுள்ளம்! இந்த நிலையில் தருமபுரம் மகாசந்நிதானம் ஒரு முடிவுக்கு வந்தார்கள். மறுநாள் காலையில் பூஜை மடத்தில் திருமுறையில் கயிறு சார்த்திப் பார்ப்பது என்பதுதான் அந்த முடிவு. திருமுறை வாயிலாகச் சொக்கநாதப் பெருமாள் உத்தரவு எப்படி அருளிப்பாடு ஆகிறதோ அப்படி நடந்துகொள்வது என்பது முடிவு.

திருமுறையில் கயிறு சார்த்திப் பார்ப்பது பழைய மரபு. ஒன்றைச் செய்யத் துணிவதற்கு முன் திருவருளின் திருவுளப் பாங்கை அறிய இருந்த அணுகுமுறை. மூவர் தேவாரம் அடங்கன் முறையில் இறைவன் சந்நிதியில் மஞ்சட் கயிறு சார்த்துவது. .

மறுநாள் காலை பூஜை மடத்தில் சிறப்பு வழிபாடு. குன்றக்குடி ஆதீனத்தின் உபயம். பூஜை மடத்தில் தேவார அடங்கன் முறை மஞ்சட்கயிறுடன் இருக்கிறது. எல்லோரிடமும் பரபரப்பு கலந்த சூழல்! பூஜை மடம் வழிபாடு முடிந்தது. மகாசந்நிதானம் எல்லோருக்கும் திருநீறு அளித்த பின், குன்றக்குடி ஆதீனத்தார், கந்தசாமித் தம்பிரான் மற்றும் திருக்கூட்டத்தார் முன்னிலையில் அடங்கன் முறையில் கயிறு சார்த்தினார்கள். முடிவு? திருக்கடவூர் மயானம் திருத்தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய வரிய மறையார். என்று தொடங்கும் பதிகம் அருள் பாலித்தது.

இப்பதிகத்தின் முதல் திருப்பாடல்,

          'வரிய மறையார் பிறையார்
          மலையோர் சிலையா வணங்கி
          எரிய மதில்கள் எய்தார் எறியும்
          முசலம் உடையார்