பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

145



கந்தசாமித் தம்பிரானைக் குன்றக்குடிக்கு எப்படி அனுப்புவது? என்ன மாதிரி ஆவணம் பெறுவது? உயிலா? செட்டில் மெண்டா என்றெல்லாம் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்தனர். செட்டில்மெண்ட் எழுதி வாங்குவது என்று முடிவு செய்தனர். இங்ங்ணம், முறையாகப் பொறுப்புக்கு அனுப்பவும் சிறப்பாக வழியனுப்பவும் விரும்பிச் செயல்பட்டனர். குன்றக்குடி ஆதீனத்தாரிடம் ‘கந்தசாமித் தம்பிரான் ஆவணி மூல நாள் வழிபாடு செய்துகொண்டு 5-9-49-ல் வருவார். மற்ற ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்றும், ஆவணி மூலத்தன்று (1-9-49) செட்டில்மெண்ட் எழுதிக் கொண்டு வரும்படியும் சொல்லி அனுப்பி விட்டார்கள்.

குன்றக்குடிக்குச் செல்வது முடிவானவுடன் கந்தசாமித் தம்பிரானுக்கு ஒரு கடமை உணர்வு தோன்றியது. அந்தக் கடமை பற்றித் தீவிரமாகச் சிந்தித்தார்; செயல்படவும் துணிந்தார். கந்தசாமித் தம்பிரான் தம் பெற்றோரைப் பற்றி எண்ணினார்.

குடும்பத்துக்குச் சொத்துகள் உண்டு. ஆனால், அவை பெற்றோர் பெயரில் இல்லை. கந்தசாமித் தம்பிரானின் (அரங்கநாதனின்) தந்தை, பரம்பரைச் சொத்துக்களை விற்று முதலாக்கி இல்லை முதலாக்கவில்லை! செலவழித்து விட்டார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை இயல்பாகத் தாராள மனம் படைத்தவர். எல்லோ ருக்கும் உதவி செய்வார். அதுவும் கார்காத்த சைவ வேளாளர் மரபினர் என்றால் பிள்ளையவர்களின் உதவி நிச்சயம் கிடைக்கும். பால் ஊற்றும் பையனாக இருந்த அந்தக் காலத்தில் அரங்கநாதன் மூலம் பிள்ளைக்கு அரங்கநாதன் குடும்பம் அறிமுகமாயிற்று. அதன் பிறகு அரங்கநாதன் (கந்தசாமித் தம்பிரான்) குடும்பத்தின் சிக்கல்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தீர்ந்து வந்தன. பிள்ளை வழக்கறிஞர் பட்டம்