பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



18

இரவு பத்து மணிக்கு நம்மை நாடி வந்த ஆதீனத்தின் உயர் அலுவலர் வி. கிருஷ்ணன் ஏதோ சொல்ல நினைத்துச் சொல்ல முடியாமல் தவித்தார். நாம் அவருக்கு ஆறுதலும் தைரியமும் கொடுத்துக் கேட்டோம்!

மகாசந்நிதானத்திடம் சில அலுவலர்கள், சின்னப் பட்டமாக இருக்கும்போதே அதிகாரத்தைப் பெற நாம் முயற்சி செய்வதாகவும் மகாசந்நிதானத்தை யாரும் பார்க்கக் கூடாது என்று உத்தரவு போட்டிருப்பதாகச் சொன்ன தாகவும் அதை நம்பி மகாசந்நிதானம் கோபத்தில் செட்டில் மெண்டை ரத்துசெய்ய மதுரை வழக்கறிஞர் சீனிவாச ஐயங்காரிடம் சென்றதாகவும், ஆனால், சீனிவாச ஐயங்கார் நிறைய எடுத்துக்கூறி செட்டில்மெண்டை ரத்து செய்யும் ஆலோசனையைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறினார் வி.கிருஷ்ணன்.

அதன்பின் திருப்புத்துாருக்கு வந்து வழக்கறிஞர் ராமசந்திரன் பிள்ளையிடமும் ஆலோசனை கேட்டார்” என்றார். ராமச்சந்திரன் பிள்ளை நல்ல வழக்கறிஞர். திருப்புத்தூரில் வாரவழிபாடு நடத்தியவர். ஆதி திராவிடர்களுக்கு ராஜாஜி பெயரில் ஒரு விடுதியும் நடத்தியவர். இப்போது இவர் அமர நிலை. இவரது அருமை மகன் ரத்தினசாமி, மாவட்ட உரிமையியல் மன்ற நடுவராகப் பணி செய்து வருகிறார். “வழக்கறிஞர் ராமச்சந்திரன் பிள்ளையும் செட்டில்மெண்டை ரத்துசெய்யும் யோசனையை வரவேற் காமல் நிறைய எடுத்துக்கூறி அனுப்பி விட்டார்” என்ற செய்தியையும் வி. கிருஷ்ணன் கூறினார்.

"சரி... போங்கள்!” என்று கூறி வி. கிருஷ்ணனை அனுப்பிவிட்டு மீண்டும் தூங்கினோம். நமது மனதில் எந்தச் சலனமும் இல்லை.