பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

201



அடுத்து, திரிகோணமலை தீவுப் பகுதிகள் சுற்றுப் பயணம். இந்தப் பயணம் தொடக்கம். அதன்பின் தொடர்ச்சி யாகப் பல முறை இலங்கைப் பயணம் சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. பின் இலங்கைப் பயணம் தொடராமைக்கு காரணம் நாமே விதித்துக்கொண்ட தடை 1968 அக்டோபரில் நாம் யாழ்ப்பாணத்தில் பேசிய கடைசிக் கூட்டத்தில் "இனி இலங்கைக்கு-யாழ்ப்பாணத்துக்கு வரும் உத்தேசமில்லை" என்று அறிவிக்கப் பெற்றது.

ஏன்? இலங்கைத் தமிழர்கள்-சிங்களர்கள் சேர்ந்து ஒருமைப்பாட்டுடன் வாழ்வது தவிர்க்க இயலாதது என்பது கருத்து. இதைப் பலவாறாக மேடைகளிலும் தனிக்கலந்துரை யாடல்களிலும் வலியுறுத்தியும் கூடத் தீவிரவாதம் குறைய வில்லை. நடுநிலைவாதிகள் இணைந்து வாழ்வதை நம்பிய வர்கள்கூட அமரர் அமிர்தலிங்கம் உட்பட தீவிரவாதி களைக் கண்டு அஞ்சினர். என்.எம். பெர்ரா தலைமையில் சமசமாஜம் என்ற ஒர் அரசியல் கட்சி இயங்கியது. என்.எம். பெர்ராவை இலங்கை ஒருமைப்பாட்டுக்குத் தீவிர முயற்சி மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் பெற்றது. ஆனால், நமது நாட்டு வரலாறுதான் அங்கேயும். இரண்டு தேசிய இன மக்க்ளும் கலந்து பழகுதற்குரிய வாயில்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தகர்க்கப்பட்டு வந்தன. அதுமட்டுமல்ல. பகையும் வளரத் தலைப்பட்டதை உய்த்துணர முடிந்தது.

எந்தவொரு நாடாயினும் நாம் வாழும் நாட்டை நமது நாடாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நாட்டு மக்களை நமது சுற்றத்தாராக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் வாழும் முறைமை. இங்ங்ணம் வாழும் முறைமை சீன இனத்துக்கு இருக்கிறது. ஆரியருக்கும் உண்டு.

தமிழ் மக்கள் இந்த வழி வாழ்ந்து சிறப்புப் பெற முடியாத நிலையில் இலங்கைக்கு வந்துபோவதில் என்ன பயன் என்பதே நமது கவலை.

இன்றைய நிலையில் புவிக்கோளம் மிக நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த உலகில் இன்று எந்தவொரு