238
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
நடத்த உதவியாக உதவியாளர்களை வைத்துக் கொள்ளுகிறோம்.
கண்வலிக்காரர்கள் வெளிச்சத்தைப் பார்க்கக் கூசுவது போல, சமுதாயத்தில் உள்ள பத்தாம் பசலிக் கொள்கையினர் புதிய கண்ணோட்டத்தைக் காணக் கூசுகிறார்கள்.
வேட்டிக் கட்டிக் கொள்வது தனி மனிதனின் மானத்தைக் காப்பதற்கு மட்டுமல்ல, சமுதாய ஒழுக்கத்திற்கும் பயன்படுகிறது. அதுபோல, கல்வி, தனி மனிதனின் நலத்திற்கு மட்டுமல்ல சமுதாய வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.
அடித்தளத்தை வலுப்படுத்தாமல் மேல் மாடியை அழகுபடுத்துவதால் என்ன பயன்? அதுபோல, இளஞ் சிறுவர்களுக்கு அவர்களின் மனப்போக்கும், மனத் தத்துவமும் அறிந்த நல்லவர்களையும், வல்லவர்களையும், ஆசிரியர்களாக்கி, சின்னஞ்சிறு சிறுவர்களைக் கல்வித் துறையில்-நல்ல முறையில் வளர்க்காமல் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியர்களையும், மனவியல் வல்லுநர்களையும் ஆசிரியர்களாக நியமிப்பதால் என்ன பயன்?
உலையில் அரிசி வெந்து கொண்டிருக்கும் பொழுது கொதிவந்து பொங்கினால் கரண்டியைக் கொண்டு நன்றாகக் கிளறிவிட்டுப் பொங்கி வழியாமல் தடுத்து விடுகிறோம். அப்படிச் செய்வதால் அரிசியும் நன்றாக நின்று வேகிறது.