அடிகளார் உவமை நயம்
261
சமையற்காரர்களின் திறமையைப் பொறுத்துச் சமையலின் சுவை அமைவதுபோல, ஆசிரியர்களின் திறமையைப் பொறுத்தே மாணவர்களின் எதிர்காலம் அமையும்.
ஒன்றை நிறுத்துக் காட்டுகின்ற தராசின் முள் மட்டும் தனித்துக் கிடக்குமானால் அதற்குக் கடமையுமில்லை, சிறப்பு மில்லை. அதே முள் தராசில் இணைக்கப் பெறுமானால் கடமையுண்டு-சிறப்பும் உண்டு. அப்பொழுது அம்முள் குறையையும், நிறையையும் காட்ட வேண்டும். அதுபோல, மனிதர்கள் பொறுப்புள்ள பதவிகளைப் பெறுவார்களானால், அப்பதவிகளுக்கு ஏற்பக் கடமைகளுண்டு. குறை-நிறை காட்டும் கடமை புரியாத தராசு-ஓட்டைத் தராசு, கடமையைச் செய்யாமல் பதவியில் வீற்றிருப்பவர்கள் உபயோகமற்றவர்கள்; உதவாக்கரைகள்.
மரம் செழித்து வளர வேண்டுமானால் அந்த மரம் தங்கி முளைக்கும் மண்ணைச் செழிப்பாக்க வேண்டும். மதம் செழித்து வளர வேண்டுமானால் அம்மதத்தைத் தழுவுகிற அம்மதத்தில் வாழுகிற மனிதர்களின் வாழ்க்கையைச் செழிப்பாக்க வேண்டும்.
கேணிச்சுவர் வெள்ளியால் கட்டப் பெற்றிருந்தாலும் வாளி தங்கத்தால் செய்யப் பெற்றிருந்தாலும், கயிறு வெள்ளியினால் செய்யப் பெற்றிருந்தாலும் அந்த கேணியில் இறைக்கும் நீர் குப்பென்று நாற்றமடித்தால் என்ன பயன்? அது போல, மனிதன் மாடமாளிகையில் வாழ்ந்தாலும்