பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இன்பத்தைப் பெற முயற்சிப்பதில்லை. அற்பமாகவே நடந்து கொள்ளுகிறார்கள். இறைவனையும் எண்ணிப் பார்ப்ப தில்லை. நாய் கடல் நீரை நக்கிக் குடிப்பது போலவே, மனிதர் களில் பலரும் திருவருளின்பம் மலிந்து கிடக்கும் இந்த உலகியலில் நக்கி வாழும் சிறுமையைச் செய்கிறார்கள் என்று கூறுகின்றார் மாணிக்கவாசகர்.

கடலில் நாய் நக்கிக் குடித்தல் இயற்கை அது மாற்ற முடியாத ஒன்று. ஆனால், மனிதனின் இயற்கை பெருந் தன்மைக்குரியது. மனிதனின் வாழ்க்கையில் சிறுமை இருப்பது இயற்கைக்கு முரண்பட்டது. செயற்கையும்கூட என்ற குறிப்பையும் அவர் உணர்த்துகின்றார்.

நாய்க்கோ நீர் வேட்கை-வேட்கையைத் தணித்துக் கொள்ள அது கடற்கரையினருகிலுள்ள சிறிய தெண்ணி ரூற்றுக்களுக்குப் போகாமல் ஆசை மிகுதியால் நிறை நீர்ப்பரப்புள்ள கடலையே நோக்கி வந்திருக்கிறது. கடல் நீரோ உப்பு நீர், நக்கித்தான் பார்க்க முடிந்ததே தவிர குடிக்க முடியவில்லை. வேட்கையைத் தணித்துக் கொள்ள முடிய வில்லை. அது போல மனிதர்கள் பேராசையின் காரணமாகஅற்பத்தனங்களின் சின்னமாக தீமைக் கடல்களையே நாடு கின்றார்கள். எனினும் அவர்களால் முடிவதில்லை என்ற கருத்தையும் மாணிக்கவாசகர் உணர்த்துகின்றார்.

“ஒன்று பரம்பொருள்-நாமதன் மக்கள்-உலகின்பக் கேணி" என்ற பெருவட்ட நோக்கோடு ஒருவரோடொருவர் ஒத்தும், ஒத்துழைத்தும் வாழ்ந்தால் நினைத்தவை கைகூடும்இன்பமாக வாழலாம்-இறையருளைப் பெறலாம் என்பது மாணிக்கவவாசகரின் கருத்து. இதோ பாடலைப் பாருங்கள்:

கடலினுள் நாய்நக்கி யாங்குன்
கருணைக் கடலினுள்ளம்
விடலரி யேனை விடுதிகண்
டாய்விட வில்லடியார்