பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இனியென்னே உய்யுமாறு
என்றென் றெண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக்
கிடக்கின் றேனை
முனைவனே முதலந்தம்
இல்லா மல்லற்
கரை காட்டி யாட்கொண்டாய்
மூர்க்க னேற்கே!”

என்ற பாடல் இதற்கு எடுத்துக்காட்டு, 'தனியனேன்' என்று குறிப்பிடுவது திருவருட் சார்பின்றி உயிர் தனித்திருக்கும் நிலையினையேயாம். உயிர் எந்த ஒன்றையாவது சார்ந்துதானே இருக்கும். அப்படியிருக்கத் தனியனேன் என்று கூறுவானேன்? உயிர் திருவருட் சார்பின்றி உலகியல் சார்பில் வாழ்வது உண்மைதான், ஆயினும், பயன்தாரத சார்பைச் சார்பென்று கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அந்தத் துணை இருந்தும் இல்லாதது போலவே! ஆதலால், தனியனேன் என்று குறிப்பிடுகின்றார். அதுவும் மயக்க உணர்வில் துணை என எடுத்துக் கொண்ட ஒன்று தன்னையே திரும்ப அழிக்க முற்படும்பொழுது அந்த உயிருக்குத் துணை நிற்பார் யாரு மில்லை. அந்தக் கால கட்டத்தில் உயிர் தனித்தே நிற்க வேண்டியிருக்கிறது. இந்த அழகான தத்துவத்தை ஒரு சீரிய உவமையின் மூலம் மாணிக்கவாசகர் எடுத்துக்காட்டி விளக்குகின்றார். .

கொடிகள் படர கொம்புகள் தேவை! கொம்பில் ஏறிப்படரும் கொடியே வளமாக இருக்கும். பூக்கும்; மணக்கும். அங்ங்ணம் படர்தற்கு கொம்பு கிடைக்காத கொடி தரையில் படரும். கொம்பில் படர்வதைப் போலத் தரையில் பிண்ணப் பிணைந்து அடர்ந்து படராது. நரைத்து நலிந்து காட்சியளிக்கும். பூக்கவும் செய்யாது, மணக்கவும் செய்யாது. ஆதலால், கொடி வளர, மலர, மணம்வீச, காய்கனிகளாகிய