பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

291


திரிகிறது. அதுபோலவே, மனிதன் ஆணவம் பிடித்தாட்டும் பொழுது தன்னைச் சார்ந்தவர்கட்குத் துன்பங்களும் தொல்லைகளும் விளைவிக்கின்றான். தன்னிச்சையாகத் திரிகின்றான். தன்னுடைய தலைவனாகிய இறைவனையே மறுக்கின்றான்.

யானை சில பொழுது தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக் கொள்ளும். அது போலவே மனிதனும் தன்னை வினைச் சேற்றில் அழுத்துக் கொள்ளுகிறான். யானை, தன்னைக் கட்டுதற்குரிய சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுப்பது போல மனிதனும் வினைவழித் தொடர்புடைய பிறப்புக்களுக்குத் தன்னையே ஆட்படுத்திக் கொள்கின்றான். வினைகளும் வினைகளால் வரும் துன்பங்களும் உயிர்களின் சொந்தச் செயலே தவிர, இன்னொருவர் தந்தவையல்ல. நமக்குரிய ஒன்றை ஊழியர் கொண்டுவந்து தருவதுபோல, நம்முடைய சொந்த பலா பலன்களை காலத்தால் தோன்றும் நியதித் தத்துவங்களும் தலைவர் வழி நம்மிடம் கொணர்ந்து சேர்க்கின்றன. கொணர்பவர்மீது காய்தலும் உவத்தலும் தேவையில்லை. அவர்கள் அஞ்சற்காரர்போல அலுவல்களைச் செய்ப வர்கள்-நாமே நம்முடைய நிலைமையையுணர்ந்து சிந்தையால் சிவனை நினைந்து உரிய தொண்டுகளைச் செய்து உயர்வும், உய்தியும் பெற முயற்சிக்க வேண்டும். பாடலைப் பாருங்கள்;

“இருகை யானையை ஒத்திருந் தென் உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெய்வமே
வருக வென்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே”


எள்ளும் எண்ணெயும்

திருவாதவூரடிகள் சிறந்த உலகியல் அனுபவம் உடையவர்; அந்த உலகியல் அனுபவம் அருளியலை நோக்கி,