பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

472

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


கேட்டு மகிழ வாய்ப்பற்ற பலரும் பயன் கொள்ளும் வண்ணம் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் இந் நூலாக சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வருகின்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு நம் நெஞ் சார்ந்த நன்றி.

சென்னை

நெ. து. சுந்தரவடிவேலு,

21-7-1975

துணைவேந்தர்,
சென்னைப் பல்கலைக்கழகம்,


பாராட்டுப் பாடல்
(நமது நிலையில் சமயம்-சமுதாயம் )
(வெண்பா)


சங்கத் தமிழ்மணமும் சைவத் திருநெறியும்
எங்கும் பரப்பும் இறையடியார்-எங்கள்
குருமுனிவர் குன்றக் குடியடிகள் ஞானத்
திருமொழிஎம் சிந்தனைக்குத் தேன்.


(விருத்தம்)


நமது நிலையில் சமுதாயம்
நாடும் சமய நெறியதனை
அமுத மொழியில் மழைபொழிந்தார்
அருளார் குன்றக் குடியடிகள்;
அமரர் சொல்லின் செல்வர்உளம்
அமைத்த நல்லறக் கட்டளையில்
தமிழர் நாட்டுத் தலைநகரில் -
தத்துவ நாதம் முழங்கியதே!


- புத்தனேரி ரா. சுப்பிரமணியம்.