பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

477



ஒழுக்கமும், பத்திமை-அருளும் செவிச் செல்வமும் மனத்தைப் பயன்படுத்தும் என்று பறைசாற்றுகின்றார். கொள்கை குறிக்கோள் தாங்கி நடைபோடும் போது மேட்டுக் குடியினர் ஆதரவு கிடைக்காது. நம்முடைய கொள்கைகளை இதயத்தில் ஏந்தித் துணை நிற்க வேண்டியவர்கள். சாதாரணமானவர்கள். கிராமங்களில் வாழ்பவர்கள். அவர் களைத் தேடுங்கள் (பக்.87) என்று நம்மைத் துரண்டுகிறார்.

நாட்டுவெறி, மொழிவெறி, இனவெறி ஏற்படுத்தாத இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள் என்று நிறுவுகிறார். ஆசிரியர் தமிழ் மொழியின்மேல் மிகுந்த பற்றுடையவர் என்பது நூல் முழுதும் காணக்கிடக்கின்றது. தமிழ் வளர்ந்தால் தமிழன் வாழ்வான் தமிழினம் நிலைத்து வாழும்' (பக்.10) என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறார்.

இருபதாம் நூற்றாண்டே சமுதாய மறுமலர்ச்சி நூற்றாண்டு என்று சிலர் கூறுவதை மறுத்து அப்பரடிகள் ஏழாம் நூற்றாண்டிலேயே சமுதாய மறுமலர்ச்சியினைத் தோற்றுவித்துப் புரட்சி செய்தார் என்பதை 'ஏழில் இருபது' என்ற தலைப்பில் அழகுபட வரைந்துள்ளார். இறுதியில் நூலுக்கு முத்தாய்ப்பு வைத்தது போல மனம் ஒரு மாளிகை யாவதற்குக் குறியெதிர்ப்பில்லாத அறச் சிந்தனையே தேவை என்று நிறுவுகிறார். இத்தகைய அறச்சிந்தனை நம் மன மாளிகையில் நின்று நிலவுமானால் உலகில் ஒப்புரவு நெறி வளரும் (பக்.200) என்பது ஆசிரியரின் நம்பிக்கை.

இதுவரை ஆசிரியர் கூறிய கருத்துகள் மனம் ஒரு மாளிகையாய்க் காட்சிதந்து அருளுள்ளம் தழைப்பதற்குத் தேவையான நன்னெறிகளாய் அமைந்தன. இக்கருத்துக்கள் எல்லாம் தமிழிலக்கியம் பலவும் தரும் பிழிவுதானே என்று நாம் எண்ணலாம். அதுதான் உண்மை.

இவ்வரிய நூலைப் படிக்கும் போது பல தமிழிலக்கியங்களைப் படித்துப் பெறும் உயர்ந்த கருத்துப் பிழிவுகள் நமக்கு