பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருத்தொண்டு நெறியே நம்மை உய்விக்கும் நெறி! நாட்டுக்கு ஏற்ற நெறி!

மணிவிழா வந்து விட்டது. இல்லை! ஆர்வ மிகுதியால் வரவழைத்து விட்டனர். விழாக்காணும் அளவுக்கு விழா வாழ்க்கை நடத்தக் கற்றோமில்லை. ஆயினும், அன்புக்கு எங்கே குறை தெரிகிறது. அதனால், விழா எடுத்திருக்கிறீர்கள்! விழா, முற்றுப் புள்ளியாகி விடாமல் விழாத சமுதாய வாழ்க்கையை அமைத்திடும் வகையில் தொடருமாக! நம்முடைய பாதை கடினமானது தான்! ஆனால், அப்பரடிகளும் அண்ணல் காந்தியடிகளும் சென்ற பாதையே! அவர்கள் சென்ற பாதைதான் என்று தெரியாமல் இடைக்கால இடைவெளி மூடி மறைத்துவிட்டது. அதனால் செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கின் துறைவென்று விளங்கவும் எல்லாவுயிர்களும் இன்புற்றிருக்கவும் பணி செய்ய உறுதி எடுத்துக் கொள்வோம்!