490
அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்
அருந்தமிழை ஒதியுணர்ந்த வித்தகத் திறமையோடு சைவ நன்னெறிபற்றி ஒழுகும் சீலத் திருவாளர் நம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். தனக்கென வாழாத் தகுதியாளர் ஆவர். அவர் வாழ்வு சமுதாய வாழ்வு, இறை வாழ்வு. இறைவனையும், சமுதாயத்தையும் பிரிக்க முடியாது. இறைவனே சமுதாயம் - சமுதாயமே இறைவன்.
சமுதாயம் என்பது மக்கள் தொகுதியை மட்டும் குறிப்பதன்று. ஏனைய உயிர்த் தொகுதிகளையும் உலகங் களையும் அது குறிக்கும். நம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களே சமுதாயம் ஆவார்கள். உலகம் ஆவார்கள்.
இத்தகு தத்துவ வித்தக ஞானியாராகிய அவர்கள் மக்கள் பொருள் உணர்ந்து அருள் பெற்று உய்வான் வேண்டி ஆற்றிய அருட்பேருரைகள் 'தமிழும் சமயமும் சமுதாயமும்' என்ற நூலாக வெளியிடுவதற்கு மகிழ்வுறுகிறேன்.
- இந்நூலினைக் கற்று மக்கள் பயன் பெறுவார்களாக
நம் மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சைவமும் தமிழும் தழைக்க, தமிழ் மக்களும், உலக மக்களும் உய்ய இன்னும் பல நன்னூல்களைத் தந்தருளி, நீடு இனிது நிலவி வாழ எல்லாம் வல்ல இக்குன்றுரை குமரன் எந்தை இளவழகனை இறைஞ்சி வாழ்த்தும்,
அருள்திரு பாலமுருகன் திருக்கோயில்
இரத்தினகிரி,
கீழ்மின்னல்-632517
வட ஆர்க்காடு மாவட்டம்,