பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

500

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


கூறுபட்டு நாள், திங்கள், ஆண்டு எனக் கணக்கிடப்பட்டு காட்சி அளிக்கின்றது. அக்காட்சி கண்ணுக்கு இனிமை தரினும், கருத்திற்கு இனிமை தருவதில்லை. காரணம் அவ்வாறு கழியும் நாள், திங்கள், ஆண்டுகளெல்லாம் உயிரினங்களின் வாழ்நாளை அறுக்கும் வாளாக அமைந்து விடுகின்றன.

ஆதலால்தான், அறிஞர்களும் அருளாளர்களும் இளமையாக்கை, செல்வம், பொருள் அனைத்தும் நிலையாமையுடையவை என அறிவுறுத்தினர்.

நிலையாமையை உணர்வதன் வாயிலாக நிலையுடையனவற்றை நாடவேண்டும் என்றும் வற்புறுத்தினர். அவ்வாறு வற்புறுத்திய அறிவுப் பெட்டகமே நமக்குக் கிடைத்திருக்கும் நீதி நூல்களும் அருள் நூல்களுமாகும்.

இவ்வாறு அவ்வப் போதெல்லாம் சான்றோர்கள் அறி வறுத்திருப்பினும் மனித இனம் அவற்றை மறந்தும் துறந்துமே பெரிதும் வாழ்கின்றது.

ஆதலால்தான் மெய்யுணர்வு உடைய சான்றோர்கள், அருளாளர்கள் மேன் மேலும் அரிய சிந்தனைகளை ஊட்ட வேண்டியவர்களாயினர்.

இவ்வாறாய அரிய சிந்தனைத் தேக்கமே, இந்நூலாக மலர்ந்துள்ளது. ஒர் ஆண்டிற்குரிய 366 நாட்களிலும் நாளும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுமாறு கொள்ளத் தக்க சிந்தனை களைத் தந்தருள வேண்டுமென இறைவனை நோக்கி விண்ணப்பிக்கப் பெற்றுள்ளது.

இவ்வரிய சிந்தனை மணிகள் திருக்குறள், திருமறைகள் முதலிய அரிய கருத்துரைகளால் கோர்க்கப் பெற்று ஒளி பெற்றுள்ளன. இவை மனித இனம் நாளும் நினைந்து நன்றாக வாழவும் உயரவும் வழிகாட்டித் தருவன.

இவ்வரிய சிந்தனைத் தேக்கத்தை வழங்கி அருளிய வர்கள் தவத்திரு அடிகளார் அவர்கள் ஆவர். அவர்கள் நாளும் ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கும் உயர் தவச்சீலர் ஆவர்.