பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

506

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்



15. அப்பர் விருந்து


1990 சூன் முன்னுரை
டாக்டர் வை. இரத்தினசபாபதி,

பேராசிரியர் மற்றும் தலைவர், சைவ சித்தாந்தத் துறை,

சென்னைப் பல்கலைக் கழகம்.


அப்பர் விருந்து என்னும், அரிய பெயரில் முகிழ்க்கும் இந்நூல் தவத்திரு குன்றக்குடி அடிகள் பெருந்தகையின் அறுபதாண்டுகளாக வளர்ந்து வரும் செயல்நிலைச் சிந்தனையின் அரியதொரு களஞ்சியமாகும்.

'ஏழில் இருபது' என்பது அடிகள் சமுதாயத்தொண்டில் அடியெடுத்து வைத்த நாள்தொட்டு இன்று வரை அதாவது அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் மூலை முடுக்குக்களெல்லாம் முழங்கி வந்த சமுதாய மறுமலர்ச்சிச் சிந்தனையின் முதல் நின்ற திருவருள் முழக்கமாகும். சிந்தனைக் கருவூலமாக இருந்த அது செயல்நிலை மறுமலர்ச்சித் திட்டமாக மாறி நிற்பதை இக்கட்டுரையிற் காண முடிகிறது.

தவத்திரு அடிகளுக்கு இரு பக்கங்கள் உண்டு. அடிகள் தம் சிந்தனை வளத்தை அறியவேண்டும்; செயல் வளத்தை அனுபவிக்க வேண்டும்; அடிகள் தம் செயல்முறைப் புரட்சியை சமுதாய மறுமலர்ச்சித் திட்டச் செயற்பாட்டை உலகம் வியக்கிறது. ஆனால் சிந்தனைப் புரட்சியை இன்று ஒருவரும் முழுமையாக அறிந்து மகிழவில்லை.

சிந்தனையையும் செயல்முறைத் திட்டத்தையும் ஒருமுகப்படுத்தி வெற்றி கண்ட தனிப்பெருமை அடிகள் பெருந்தகைக்கு உண்டு.