இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்
513
அவருடைய முயற்சிகள் வெற்றி பெற எல்லாம் வல்ல சிவபெருமானை நான் வேண்டிக் கொள்கிறேன்.
டி. வி. வெங்கட்டராமன்
சென்னை
23-8-90
- "சைவத்தின் மேல், சமயம் வேறிலை;
- அதில் சார் சிவமாம்
- தெய்வத்தின் மேல் தெய்வம் இல்”
- "சைவத்தின் மேல், சமயம் வேறிலை;
-சைவ எல்லப்ப நாவலர்.
என்பதும்
- "சைவ சமயமே சமயம்;
- சமயா தீதப் பரம் பொருளைக்
- கைவந் திடவே மன்றுள் வெளி
- காட்டும்; இந்தக் கருத்தைவிட்டுப்
- பொய்வந் துழலும் சமயநெறி
- புகுத வேண்டா"
- "சைவ சமயமே சமயம்;
-தாயுமானவர்
என்பதும் சைவப் பெரியோர் வாக்குகள். இவற்றை இக்காலத்தில் நடுவு நின்று ஆராயும் ஆராய்ச்சியாளரும் 'உண்மையென' உடன்படுகின்றனர். இந்திய நாட்டு வரலாறு கூறுவோரும், இந்நாட்டின் பண்டைச் சமயம் சைவமே என் கின்றனர்.
இத்தகு சிறப்பு வாய்ந்த இச்சமயத்தின் தத்துவமே 'சைவ சித்தாந்தம்'-என்பது பலரும் அறிந்தது.
தமிழ்நாட்டின் தொன்மைச் சமய தத்துவமாகிய சைவ சித்தாந்தம், சென்ற 7 அல்லது 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு