பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

523


பற்றாளர். தமிழ் உணர்வு படைத்தவர்கள். அவர்கள் கூறும் கருத்துக்களில் என்றும் புதுமை இருக்கும். சிந்தனையைத் தூண்டும். மக்களை நல்வழிப்படுத்த நெறிப்படுத்த, முறைப்படுத்த தேவையான கருத்துக்கள் இருக்கும்.

பகுத்தறிவு வாதிகளும் ஏற்றுக் கொள்ளும் ஆன்மிகவாதி. அது அவர்களுடைய தனிச்சிறப்பு. அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் அவருடைய கருத்துக்கள் எல்லா அரசியல் கட்சிகளாலும் மதிக்கப்படும். போற்றப்படும்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். சிலப்பதிகாரம் வலிறுத்தும் மூன்று நெறிகள் எவை என்பதை தவத்திரு அடிகளார் இந்நூலில் அற்புதமாக விளக்கி இருக்கிறார். முதல் நெறி அரசியலில் உள்ளவர்களுக்கு அறநெறி பற்றிக் கூறுவது.

சிந்தனையால், செயலால், மக்களிடத்தில் அன்பு காட்டி மக்கள் இனம் வாழ்வதற்கு உரியவற்றை செய்வது தான் அறம். தொண்டு மனப்பான்மையுடன் சுயநலமில்லாத செயல்கள். மனதுக்கு துய்மை தரும். அது தான் அறம். அதுதான் அரசியலில் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய அறநெறி. இதுவே சிலம்பு நெறி என்று அற்புதமாக விளக்குகிறார், தவத்திரு அடிகளார். அவர்கள்.

சிலப்பதிகாரம் வலியுறுத்தும் இரண்டாவது நெறி "உரைசால் பத்தினியை" உயர்ந்தோர் போற்ற வேண்டும், நாடு சிறப்புற நல்ல அரசு தேவை. வீடு சிறப்புற நல்ல மனைவி தேவை. நாட்டிற்கு வலிமை சேர்ப்பதே நல்ல மனைவிதானே. நாட்டிற்கும் வீட்டிற்கும் விழுப்பம் சேர்க்கும் கற்புடைய மனைவியை, பத்தினி பெண்டிரை உயர்ந்தோர் போற்ற வேண்டும். இது இரண்டாவது சிலம்பு நெறி.

தூய அன்பு, கணவனுக்குத் தியாகம் செய்தல். வாழ்க்கையின் அனைத்துத் துறையிலும் கணவனுக்குத் தோழமையாதல், துணை நிற்றல் இவை அனைத்தும் சேர்ந்த