பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3


மண்ணும் மனிதர்களும்
முகவுரை

'ஆனந்த விகடன்' என்றால் புகழ்மிக்க எஸ்.எஸ். வாசன் அவர்கள் நினைவுக்கு வருவார். பேரறிஞர் அண்ணா காலத்தில் சென்னையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் ஊர்வலத்துக்குத் தமிழ்த் தேர்கள் செய்து தந்த பெருமை எஸ்.எஸ். வாசன் அவர்களுக்கு உண்டு.

இந்த நினைவு அலைகளுடன் 1992-ம் ஆண்டு சுதந்திர தினத்திலிருந்து நமக்கு ஒர் ஆனந்தம் வந்திருக்கிறது. எழுதுவதே ஒர் ஆனந்தம்! கடந்த காலச் சுவையான அனுபவங்கள், நிகழ்காலப் போக்குகள் இவற்றை நினைத்துச் சுவைத்து எழுத எண்ணம்.

வாழ்க்கையென்பது நிகழ்வுகளால் ஆன தொகுப்பு. நிகழ்வுகளே புவியை நடத்தும் உயிர்சக்திகள். எந்த ஒரு நிகழ்விலும் நிகழ்வு முக்கியமல்ல. அந்த நிகழ்வில் பொதிந்துள்ள எதிர்கால வளர்ச்சிக்குரிய வித்துதான் முக்கியம். நிகழ்வு விரிவாக எழுதப் பெற்றால் வரலாறு. வரலாற்றைக் கவிதைப் பாங்கில் உணர்ச்சி கொப்பளிக்க எழுதினால் காப்பியம். நிகழ்வுகளை-இல்லை, நிகழ்வுகளின் ஊடே இருக்கும் புத்துயிர்ப்பு வாயில்களை எதிர்கால வரலாற்றுக் குரிய வித்தை, உந்து சக்தியைக் கண்டு எழுதுதல் இலக்கியம்.