பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

103



திருக்குறளில் சமவுடைமை

னித உலகம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் ஒடி விட்டன. மனித உலகத்தின் சென்ற கால வரலாறு சிந்தனைக் குரியது. மனித குலம், தோன்றிய காலத்தில் நாகரிகமாக வாழ்ந்திருக்க முடியாது. ஆனாலும் சுதந்திரம் நிச்சயமாக இருந்திருக்கும். மனித குலம் வளர, வளர உடைமை, உணர்வுகள், புறஇயல் நாகரிக உணர்வுகள் ஆகியவை வளர்ந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனாலும் அதே பொழுது அவனுடைய வாழ்க்கையில், அவன் அனுபவித்து வந்த சுதந்திரம் மெதுவாகக் குறைந்து வந்திருக்கிறது. அவன் சுதந்திரப் பறவையாக அச்சமின்றித் திரிந்து வாழ்ந்தது போய், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அச்சப்படும் சூழ்நிலை உருவாயிற்று. இந்தப் பலவீனத்தால் தோன்றியவைதான் பேரரசுகள்.

மனிதனின் வாழ்க்கையில் இயல்பிலேயே சுதந்திர உணர்வு ஊற்றெடுத்துக் கிடக்கிறது. இயற்கையின் காரணமாகவோ, சூழ்நிலையின் காரணமாகவோ உள்ளுணர்வை இயக்கி, ஒளியூட்டிக் கொள்ளப் பலர் தவறுவதினாலோ, சிலர் ஆள்கின்றவர்களாகவும், பலர் ஆளப்படுகின்றவர்களாகவும் சமுதாயத்தில் உருவாகி விடுகிறார்கள்.

காலத்தின் நியதி இங்ஙணம் படைத்தாலும், ஆளுகிறவர்கள், ஆளப்படுகிறவர்களுடைய நலத்தில் அக்கறை காட்டாமல், ஆளத் தொடங்கியபோது, அடிமை வாழ்க்கை முறை தோன்றியது. மனித குலத்தில், அடிமை வாழ்க்கை முறை தோன்றியதுதான், நாகரிக வீழ்ச்சியின் கடைசி எல்லை. அந்தக் கடைசி எல்லை வரையில் மனித உலகம் அறிந்தோ, அறியாமலோ சென்று விட்டது.

ஆனால் மனித குலம் தனது வீழ்ச்சியைத் தெரிந்து கொண்டு தெளிவு பெற்று, அடிமைத் தளையை அகற்றிடத்