பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

149



அரசியல் நீதியில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியனும், தெய்வக் கற்பின் உயிரை நிறுத்தி வாழ்ந்த பாண்டிமாதேவியும், இன்பநட்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பிசிராந்தையாரும் கொடையில் உயிரை நிறுத்தி வாழ்ந்த குமணனும், தமிழின நாகரிகத்தின் காப்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த அப்பரடிகளும் எண்ணத்தக்கவர்கள். ஆதலால் உயிருடைமைக்கும் இன்மைக்கும் அடையாள்ம் உண்ணலும் ஒடித்திரிதலும் அன்று.

          அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்
          என்புதோல் போர்த்த உடம்பு

என்பது திருக்குறள். எலும்பு போர்த்த உடம்பு யாதொன் றிற்கும் பயன்படாது. அதுமட்டுமின்றி நாற்றத்தால் மற்ற வர்க்கும் கேடு செய்யும். ஏன் தோற்றத்தாலேயே கண்டாரை வெருட்டும். அதுபோல அன்பில்லாத மனிதர்களால் அவர்களுக்கும் மனித உலகத்திற்கும் பயனில்லை. பயனில் லாததோடன்றித் தீமையும் விளைக்கும்.

உடைமையியல்

இன்றைய மனித சமுதாயத்தில் உடைமை உணர்வு மிகுதியும் மேலோங்கி நிற்கிறது. அதாவது நிலம், பொன், பொருள் ஆகியவைகளைத் தனிமனிதர்கள் தத்தம் உடைமையாக்கிக் கொள்ளப் போரிடுகின்றனர். வெற்றி பெற்ற பின்பு, உழைப்பின் வழி வாழாமல் உடைமைகளையே சார்ந்து வாழத் தலைப்படுகின்றனர். மனிதனுக்கு ஏவல் செய்ய வேண்டியன உடைமைகள். ஆனால் உடைமைகளுக்கே மனிதர்கள் அடிமைகளாகி விடுகின்றனர். இங்ங்ணம் மனித குலத்தின் ஆற்றலை, பண்பை அரித்து அழிக்கும் உடைமைகள் மீது சான்றோர்களுக்கு வெறுப்பு ஏற்படுவது இயற்கை இந்தவகையில் காரல்மாக்ஸ் மாமுனிவரின் சிந்தனை ஏற்றுக் கொள்ளத்தக்கது; பாராட்டத்தக்கது. அவர்