பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

35



"வாய்மை எனப்படுவது யாதெனின், யாதொன்றும் தீமை இலாத சொலல்’ என்பார் வள்ளுவர். யாதொன்றும் தீமையிலாத சொலல் என்ற சொற்றொடர் எண்ணத்தக்கது. சொல்லினால் வரும் தீமைகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்திக் கூறுகின்றார். சொல் எளிதில் தோன்றுகிறது. ஆனால், நிறைந்த விளைவுகளை உடையது. ஆதலால், எளிதில் சொல்லாது எண்ணிச் சொல்லும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நாம் சொல்லும் சொல்லால் யாருக்கும் எத்தகைய துன்பமும் வரக்கூடாது. அதுவே வாய்மை.

வாய்மை நிறைந்த சொற்களைச்சொல்லப் பழகுதலே ஒர் அரிய பயிற்சி. ஒருவரிடம் தகுதியில்லாதன கண்டால் அவரைத் தனியே அழைத்துத் தண்ணளி சேர்த்து இன்புறச் சொல்லி அத்தகுதியல்லாதன நீக்குதலே வாய்மை நெறி. மற்றோர் அறியத் தூற்றுவது வாய்மையாகாது. மற்றவருடைய புகழுக்கும் பெருமைக்கும்-உரிமைக்கும் உடைமைக்கும். உணர்வுக்கும் பாதுகாப்பாக இருக்கும் சொற்களே வாய்மையுடைய சொற்கள்.

வாய்மையால் வையகத்திலுள்ளோர் நெருங்கி வாழ்வர்; நேசம் காட்டுவர். அகத்துய்மை வாய்மையினா லேயே பெறமுடியும். அகத்துய்மையை எடுத்துக் காட்டுவதும் வாய்மையேயாம். வாய்மை வழியின்றி அகத்துாய்மை பெறுதற்கோர் வழியில்லை. பகைவரையும் வாழ்த்தி, மறத் தன்மையில் செய்து முடிப்பதே வாய்மையின் சீலம். பகைவரின் புகழுக்கு இகழ்ச்சி தரும் வகையில் பழி தூற்றுதல் வாய்மை யாகாது.

சொல்முறையில் பொய்போலத் தோன்றுவதும் கூட நன்மை விளைவிக்குமானால், அது வாய்மையேயாம். அன்பும் பாசமும் அகத்தினில் இல்லாது புறத்தே காட்டுதல் பொய். அது வாய்மையன்று. வாய்மை, வாய்வழி விளக்க