பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

67


கருதும் அடிப்படையிலேயே அந்த அதிகாரம் அமைந்துள்ளது.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

என்பது திருக்குறள். இங்கு ஒத்தது என்ற சொல்லுக்கு வழக்கம்போல் பரிமேலழகர் உலக நடையினை என்று எழுதித் தப்பித்துக் கொண்டு விட்டார். அது நிறைவான கருத்தன்று. தன்னைப் போல் பிறரை நினை' என்பது ஒரு விழுமிய ஒழுக்கநெறி அருள் வாக்கு,

இன்றையச் சமுதாயத்தில் பலர் தம்மோடு பிறர் ஒத்துவர வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர, பிறரோடு தாம் ஒத்துப்போக வேண்டும் என்று கருதவில்லை. பலருக்கு எது ஒத்ததோ அதற்குச் சிலர் இணங்கியே லாம வேண்டும். அதுவே சமுதாய நியதி-ஒழுக்கம். உணர்ந்து வாழ்பவர்களே வாழ்பவர்கள். அவர்கள் யிலேயே இன்பமும் அமைதியும் இருக்கும். ம. அவர்தம் வாழ்க்கையாற் பயனுண்டு.

இங்ஙனம், ஒத்ததறிந்து ஒழுகத் தெரியாதவர்கள் வாழ்ந்தாலும் நடமாடினாலும் பிணம் என்றே கருத வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது. காரணம், பிணத்திற்கு மனித உருவ அமைப்பு இருந்தாலும் உணர்ச்சியில்லை; உதவும் பண்பில்லை. அதுபோலவே, ஒத்ததறிந்து வாழும் இயல்பில்லாதவர்களுக்கும் அன்பு, சமுதாயம் ஆகிய உணர்ச்சிகள் இல்லை. அவர்களும் உதவ மாட்டார்கள். பிணத்தை நடு வீட்டில் நடுத்தெருவில் பல நாட்கள் வைப்பதரிது. காரணம் நாற்றமெடுக்கும்; காற்றைக் கெடுக்கும்; சமுதாயத்திற்கு நோய் தரும்.

அதுபோலவே, ஒத்ததறிந்து உதவி வாழ முடியாத மனிதன் நெஞ்சத்தால் நாற்றமெடுத்தவனாவான். பிணம்