பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது



239


பெயர் சொல்ல முடியாது. திருக்குறளும் ‘அறிதோறு அறியாமை’ என்றது.

மனிதன், அவன் வாழும் சூழ்நிலைகளால் உருவாக்கப் படுகின்றான். அவனுக்கென்று தனியே ஒரு குணம் இல்லை. மனிதனுடைய எண்ணம், கருத்து ஆகியவை கூட அவன் சார்ந்துள்ள புறச் சூழ்நிலைகளின் பிரதிபலிப்பேயாகும் என்பது மார்க்சீயத் தத்துவம். நமது திருவள்ளுவம் இதனையே.

"மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு”

என்றது.

மார்க்சீயம், சொற்களுக்குக் காணும்பொருளே வேறு. மார்க்சீய அகராதியில் ‘பொருள்’ என்றால் தங்கம்- நாணயம் ஆகியவற்றை ஒரு பொழுதும் குறிக்காது. மனிதக் குலத்திற்குப் பயன்படும் தகுதி குறித்தே பொருளுக்கு மதிப்பு என்பது மார்க்சீயத்தின் சித்தாந்தம். திருக்குறளும் ‘பொருள்’ என்ற சொல்லுக்கும் பொருளாகக் காட்டியது; மனிதகுலம் துய்த்து மகிழ்ந்து அனுபவித்து வாழக்கூடிய, வாழவைக்கக் கூடிய பொருள்களையே. "பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லை" என்ற திருக்குறளுக்கு இதுவே கருத்து. உடல்-உயிர்ப் பிணைப்பில் நடமாடும் மனித உலகம் நெடிதுநாள் வளர வாழ உண்பனவும், தின்பனவும் ஆகிய துய்ப்புப் பொருள்கள் தேவை. அத்தகைய பொருள்களே பொருள்கள் என்பது வள்ளுவத்தின் செழுமையான கருத்து.

உழைப்பாற்றலே மனிதனுக்குரிய ஒரே உடமையாக இருக்க வேண்டும், என்பது மார்க்சீயம். "உழைக்காதவனுக்கு உண்ண உரிமை இல்லை" என்றே மார்க்சீயம் ஐயத்திற்கு இடமின்றித் தெரிவிக்கிறது. நமது திருக்குறளும்.