பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



337


33. ஊராட்சியும் பேராட்சியும்

இனிய செல்வ,

இன்று எங்கும் கிராம சுயராஜ்யம். கிராம பஞ்சாயத்துக்கு சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுகிறார்கள். இஃது ஒரு வரவேற்கத்தக்க நிகழ்ச்சி. அண்ணல் காந்தியடிகள் கிராம சுயராஜ்யம் என்றே கூறினார். ஆனால் 40 ஆண்டுகள் கழித்துத்தான் கிராம பஞ்சாயத்துக்களின் அடிப்படை அதிகாரங்களைப் பற்றியே பேசத் தொடங்கியிருக்கின்றோம். காலங் கடந்தாவது இந்த எண்ணம் வந்தது பாராட்டுதலுக் குரியது.

இனிய செல்வ, இன்றைய கிராம பஞ்சாயத்துக்கள் தெரு துப்புரவு செய்யும் தொழில் செய்து வருகின்றன. தெருவிளக்குகள் எரிக்கப்படுகின்றன. இன்றைய பஞ்சாயத்துக்கு இதைத்தவிர வேறு இல்லை. ரூ.100கூட தலைவர் எடுக்க இயலாது. ஆணையர் அனுமதி வேண்டும். போதிய நிதி ஆதாரம் இல்லை. பல பஞ்சாயத்துகளுக்கு மின்சாரக் கட்டணம் கட்டக் கூடக் காசு இல்லை. இன்றைய பஞ்சாயத்துக்களின் நிலை பரிதாபமானதுதான்!

கிராம பஞ்சாயத்துக்கள் குடியரசுத் தத்துவப்படி நாட்டின் ஒருபகுதி கிராம வளர்ச்சிக்குத் திட்டமிடவும், திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றவும், கிராம பஞ்சாயத்துகளுக்கு நிதி ஆதாரங்கள் வேண்டும்; மேலாண்மையும் பொறுப்பும் இருக்க வேண்டும். ஒரு சுதந்திர சோசலிசக் குடியரசை விரும்புகின்றவர்கள் இதை நிச்சயம் ஏற்பார்கள். நமது நாட்டிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன. கிராம பஞ்சாயத்துகளுக்கு உரிமையும் மேலாண்மையும் வழங்கப்படுவதை யாரும் மறுக்கவில்லை. இஃது ஒரு வரவேற்கத்தக்க அம்சம். இனிய செல்வ, ஆனால் பஞ்சாயத்துகளுக்கு அதிக உரிமைகளும் மேலாண்மைகளும் யார் வழங்குவது? மைய அரசு வழங்குவதா? மாநில

தி.23.