பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



369


சண்டைகள் நடவாத மாநிலம் இல்லை. எங்கும் கலகத் தீ. மைய அரசு அலுவலகங்களில் தீ!

இனிய செல்வ இன்றைய இந்தியா எங்கு போகிறது? கி.பி.2000 இல் இந்தியா வலிமை பெற்ற ஒரு நாடாக விளங்க வேண்டாமா? ஆம்! நம் ஒவ்வொருவரையும் விட இந்தியா பெரிது! இந்தியா வலிமை பெற்றிருக்க வேண்டும். அப்படியானால் ‘நான்’ ‘எனது’ என்ற செருக்குகளை அறவே விட்டொழிக்க வேண்டும். அல்லது நாட்டின் நலன், மனிதகுல நலன் என்ற ஆதார சுருதிக்கு அடங்கியாவது வாசிக்கவேண்டும். இனிய செல்வ, இதுவே இன்றை தேவை! அடுத்து எழுதுகின்றோம்.

இன்ப அன்பு
அடிகளார்
46. ஒரே ஆன்மீக ராகம்

இனிய செல்வ,

நமது முன்னோர்கள் வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமை கண்டார்கள். ஒற்றுமையையே கண்டார்கள். வேற்றுமைகளை அவர்கள் பார்த்ததில்லை. பார்க்க விரும்பவும் இல்லை.

"வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால்
மாறுபடுங் கருத்தில்லை”

என்றார் தாயுமானவர். "வேறுபாடுகளைக் காண்பதுதான் நமது இடும்பைகளுக்கெல்லாம் காரணம்" என்றார் விவேகானந்தர். இந்த அற்புதமான வாழ்வியல் நாகரிகத்திற்கு ஊடே குறுக்குச்சால் ஒட்டினவர்களும் இல்லாமற் போகவில்லை; ஆனால் அந்த அருளார்களின் கருத்து சென்ற நூற்றாண்டுகளில் எடுபட வில்லை. இனிய செல்வ, வரலாற்றை மறுத்து எழுதப் பேனா துடிக்கிறது. ஆம்; மதச்சண்டைகள் வரலாற்று ஏடுகளில் நிறைய பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்பதை யார்தான் மறக்க

தி.25.