392
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வேண்டும். உலக நாடுகள் பேரவை கூட வைத்திருக்க அனுமதிக்கப் பெற வேண்டியது அமைதிப்படையே தவிர, ஆக்கிரமிப்புப்படையல்ல. இனிய செல்வ, இந்த ஒரே வழிதான் உலகத்திற்குத் தீர்வு! அமெரிக்கா ஒத்துக்கொள்ளுமா? அமெரிக்காவின் தொழிலே போர்க் கருவிகள் செய்து சந்தையில் விற்பது தானே! அமெரிக்காவின் அணுகுமுறை அடியோடு மாறினால்தான் உலகத்திற்குப் பாதுகாப்பு; சமாதானம்!
அமெரிக்கா எண்ணிப்பார்க்குமா? அமெரிக்காவை மற்ற நாடுகள் நிர்பந்தப்படுத்துமா? அமெரிக்க மக்கள் தங்கள் அரசைப் போர் அற்ற அரசாக அமைக்க முன்வருமா? வளைகுடாப் போரில் அமெரிக்க வீரர்கள் இறக்க வில்லையா? அமெரிக்காவிற்கு இழப்பு இல்லாமலே ஈராக்கிற்கு இழப்பு உண்டாக்க முடிந்ததா? முடியுமா? போர் ஆயுதம் செய்தலைத் தொழிலாகக் கொண்ட நாடு, போர் மூலம் தீர்வு காண முயலும் ஒரு நாடு எப்படி அழியாமல் இருக்க முடியும்? இன்றில்லையானாலும் எதிர்காலத்தில் போரைச் சாதனமாக உடைய நாடு, நடுவுநிலை பிறழ்ந்து போனால் உலகத்தை ஆட்டிப்படைக்கும் நாடுகள் வரலாற்றில் நிலை நின்றதில்லை. அவைகளுக்கும் அழிவு வரும்.
இனிய செல்வ நமது திருக்குறள்,
"கெடுவல்யான் என்பதறிக தன்நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்”
என்றருளிய திருக்குறளை எண்ணுக! அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இந்தத் திருக்குறளை - திருக்குறளின் பொருளை எண்ணிப்பார்த்துத் திருந்த வேண்டும்.