திருவள்ளுவர் காட்டும் அரசு
175
அதற்கு ஒரு மூலதனம் என்று பெயர் வராது. ஆனால் இந்த நூறு பேரும் அரசின் வங்கியிலே இட்டால், இந்த நூறு பேரும் ஒரு சிறு சேமிப்பிலே இட்டால், நூறு ரூபாயும் ஒரு இடத்திலே சேருகிறது. அது ஒரு பெரிய பொருளைச் சேர்க்கின்ற சக்தியைப் பெறுகின்றது.
சாதாரணமாக உதிரி உதிரியாக வருகின்ற பணத்தை, சில்லறையாக வந்து சேருகின்றதைத் தயவு செய்து உடனுக்குடன் அழித்துவிடாதீர்கள். அதை ஒரு மூலதனமாக உருவாகிற வரையில் அந்தப் பொருளைப் பத்திரமாகச் சேமித்து வையுங்கள்.
மூலதனத்தின் திரட்சி தேவை என்பதை, பொருளியல் நூல்கள் கருதுவதை, வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு தெளிவாகவும், நுட்பமாகவும், சொல்லியிருக்கிறார்.
புதிய துறைகளில் பொருள் வருவாய்க்காகச் செய்ய வேண்டும். அவற்றை முறையாக ஈட்டிக்கொண்டு வர வேண்டும். அவற்றைக் கொண்டுவந்து பிறிதொரு மூலதனத்தைப் பெறுதற்குரிய இன்னொரு செல்வத்தை, தகுதி பெறுகின்ற காலம் வரையில் காக்க வேண்டும்.
ஆனால் நெடிய நாட்களுக்கு அந்தப் பணம் தூங்கி விட்டாலும் ஆபத்து. அதற்குப் பிறகு அதை வகுத்து முறைப்படுத்த வேண்டும்.
வகுத்தல் என்றால் விநியோகம் என்றோ, வேறு மாதிரியாகவோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த நாட்டிலே விநியோகம் என்பது ஒழுக்கமில்லாத ஒன்று. அதனாலே விளைகின்ற இன்னல்கள் ஏராளம்.
உதாரணமாக, நம் நாட்டிலே வழிபாட்டு நிலையங்கள், பஜனை மடங்களுக்குச் சென்றால், கடைசியாக எல்லோருக்கும் சுண்டல் கிடைப்பது தெரிந்ததே!