பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வழிபாட்டு நிலையங்களுக்கு நம் நாட்டிலே இது ஒரு முத்திரையாயிற்று. ஒருநாள் வழிபாட்டு நிலையத்திலே வழிபாடுகள் எல்லாம் முடிந்த பிறகு, சுண்டல் கொடுக்கின்ற காலக் கட்டம் வந்தது; அன்று கூட்டம் கொஞ்சம் அதிகம். ஆனால் சுண்டல் கொஞ்சம் குறைவாக இருந்தது.

அதை எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தபொழுது, அங்கு இருந்த ஒரு பெரியவர் சட்டியைப் பார்த்தார். ‘கூட்டம் அதிகமாக இருக்கிறது. சுண்டலோ குறைவாக இருக்கிறதே! எல்லோருக்கும் கிடைக்குமா?" என்று பெரியவர் சுண்டல் கொடுக்கிறவரைப் பார்த்துக் கேட்டார். ‘சுண்டல் கொஞ்சம் குறைவாக இருக்கிறது, எல்லோருக்கும் கிடைக்கும்படியாக நிரவிக்கொடு’ என்று சொன்னார்.

சுண்டல் கொடுப்பவர் நிரவிக் கொடுக்க ஆரம்பிக்கையில், கூட்டத்திற்குப் பின்னால் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவன் பஜனைக்குக்கூட வரவில்லை சுண்டலுக்காக வந்தவன்.

இத்துணை பேருக்கும் கொடுத்துக்கொண்டு வந்தால் நமக்கு வராதோ என்ற கவலை அவனுக்கு ஏற்பட்டதோடு மட்டுமின்றி, அச்சம் வேறு வந்துவிட்டது. ஆகையினாலே, முன்னால் இருந்தவர்களைத் தள்ளிக்கொண்டு சென்று பத்துப் பேருக்குரிய சுண்டலைக் கைபோட்டு எடுத்துச் சென்றுவிட்டான். அந்த இடத்திலே நிகழ்ந்த அச்சம்பவத்தை, அந்த இடத்திலே இருந்த யார் பார்த்தாலும் பொறுமையாக இருக்க மாட்டார்கள்.

எவ்வளவு பெரிய பொறுமைசாலியாக இருந்தாலும், ‘என்னப்பா! பத்துப் பேர் சுண்டலை ஒரு ஆள் அள்ளிக் கொண்டு போகிறாயே!’ என்று கேட்டுத்தான் கோபிப்பார்கள்.

பஜனை மடத்திலே பத்துப் பேருக்கு விநியோகிக்க வேண்டிய சுண்டலை ஒரு ஆள் அள்ளிக்கொண்டால்,