பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



197


ஒன்றா, இரண்டா, மூன்றா, நான்கா என்று வைத்துக்கொள்ள முடியாது.

நிறைந்த ஒழுக்கங்கள் பல தேவை. ஆகையினாலே திருவள்ளுவர் ‘குற்றமுடையான்கண்வெகுளி’ காட்டாமல் குற்றத்தின்மீது வெகுளி காட்டுகிறார்.

அதை நம்முடைய திருஞானசம்பந்தர், வெகு அற்புதமாகத் தேவாரத்தில் சொன்னார்.

‘ஆழ்க தீயதெல்லாம்
அரன் நாமமே சூழ்க’

சமணர்களையோ, மற்றவர்களையோ, தீயவர்கலளையோ, அவர் ஆழவேண்டும் என்று சொல்லவில்லை. “ஆழ்க தீயது.” தீமை ஒழிய வேண்டுமே தவிர, தீமை உடையவர்கள் ஒழியக் கூடாது.

தீமை உடையவர்மீது நமக்குப் பற்றிருக்க வேண்டும். ஆனால் அவனுடைய தீமையை மாற்றவேண்டும். அதனால் தான் நாத்திகர்களைப்பற்றி மாணிக்கவாசகர் சொல்லுகிற போது “ஆத்தமானார்” என்றார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைப் பார்த்தால் மாணிக்கவாசகருக்கு மிகவும் அச்சம். இருந்தாலும் ரொம்ப ஆத்தமானவர்களாயிற்றே!

‘ஆத்த மானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்’

என்றார்.

அவர் அப்படி அணைக்கிறார், அயலவர்கள் ஆத்தமானார் என்று. காரணம், அவர்கள் மீது பகை இருக்கக்கூடாது என்பதனாலேயே.

ஆக திருவள்ளுவர்,

‘குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.’

549