பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3
திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு

அன்புக்கும் போற்றுதலுக்குமுரிய தலைவர் அவர்களே! பெரியோர்களே! நண்பர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! பொதுவாக, நம் அனைவரையும் மீண்டும் மீண்டும் கூடிச் சிந்திப்பதற்கு வாய்ப்பளிக்கின்ற திருவருளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி! வாழ்த்துக்கள்.

சாதாரண சாலைவழிப் பயணத்திலும் நிகழ்ச்சி அமைப்பிலும் கூட, நாம் பல தவறுகளைச் செய்கிறோம். இந்த மாதிரி தவறுகள் நிறைந்த வாழ்க்கை சமூகத்திற்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பெரிய பயனைத் தருவதில்லை. அதனால்தான் இன்றைக்கும் பேச்சு இருக்கிறது. நாளைக்கும் பேச்சு இருக்கிறது என்று என்னுடைய செயலாளர் சொன்னார். நான் இன்றைக்குத் திருவள்ளுவரைப் பற்றியும், நாளைக்குச் சேக்கிழாரைப் பற்றியும் பேசலாம் என்று இருந்தேன். இன்றைக்குக் கடைசிப் பேச்சு என்று சொல்கிறார்கள். ஆகவே இன்றைக்கு என்னுடைய பேச்சை எப்படி அமைத்துக் கொள்வது என்று காரிலே ஏறிய பின்புதான் கலந்து பேசினேன். இன்னும் எத்தனை நாள் மாரியம்மன்