பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொங்கல் பரிசு



251



‘உள்ளம் இல்லாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.’

598

என்பது திருவள்ளுவர் வாக்கு. ஆதலால், வாழ்க்கையின் இன்றியமையாத் தேவையாகிய பொருளை-அப்பொருள் பற்றிய மதிப்பீட்டை-அப்பொருளைப் பெறுதற்குரிய வழியைத் திருவள்ளுவர் விளக்கும் முறை முற்றிலும் விஞ்ஞானப் பார்வையின்பாற் பட்டதாக உள்ளது. மிகவும் முற்போக்கான கருத்து. வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது என்பதை இரு பொருள்படப் பேசாமல் திட்டவட்டமாக ஒத்துக் கொள்ளுகின்றார். அந்தப் பொருள் பரம்பரை வழியாகக் கிடைத்திடுமாயின் அது உடைமையல்ல என்றும் கூறுகிறார். பொருள் உடைமையைவிடப் பொருளைப் படைக்கின்ற ஆற்றலுடைமையை - ஊக்க முடைமையையே உடைமை எனப் பாராட்டுகின்றார். இஃது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகமிக வியக்கத்தக்க ஒரு கருத்து. இதனையே இன்றையப் பொருள் முதல் வாதம் சித்தாந்தமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. தனிமனிதன் காலம் என்ற களத்தில் நின்று, ஊக்கமுடையவனாகப் பொருள் செய்து குவிக்க வேண்டும். இதுவே சமநிலைச் சமுதாய அமைப்பிற்குத் தொடக்க நிலையாகும்.

அறிவுடைமை

முற்போக்குச் சமுதாயம் அமையக் காலமும் ஊக்கமும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமானது அறிவும் ஏன்? காலத்தையும் ஊக்கத்தையும்விட அறிவுடைமை மிகமிக இன்றியமையாதது. அறிவுடைமைதான் காலத்தையும் ஊக்கத்தையும் முறைப்படி பயன்படுத்தத் துணை செய்கின்றது.

சோஷலிச சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டுமானால், மக்களிடத்தில் சரியான அறிவு பரவுதல்